தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு இடையேயான மோதல்கள் வாடிக்கையாகியுள்ளனர். இந்த நிலையில் சட்டமன்றத்தில் ஆளுநர் வெளியேறியதில் இருந்து தற்போது வரை கடுமையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன, இந்த நிலையில் ஆளுநர் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்து வருவதாக புதுவை துணை நிலையம் தமிழிசை தெரிவித்துள்ளார்


புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து, சுற்றி இருந்தோர் "பொங்கலோ பொங்கல்" என்று உற்சாக முழக்கங்களை எழுப்ப பொங்கல் பண்டிகை கொண்டாடினர். 


பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- 


ஒரு சிலர் ஆளுநரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். முதல்வர் யாரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லிய போதும் ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்து வருகிறது. கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்பது தான் மரபு. மேலும், தமிழ்நாடு என்கிற பெயருக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. இதை அறிவித்த காமராஜருக்கு பெருமை உண்டு, அதை சட்டமாக்கிய அண்ணாவுக்கும் பெருமை உண்டு. அதை தமிழர்களாக காப்பாற்ற வேண்டியது நம் கையில் தான் உள்ளது. ஒரு கருத்தை சொன்னால் அந்த கருத்தை நாகரிகமாக எதிர்க்கொள்ள வேண்டும். பொங்கல் எப்படி இனிமையாக உள்ளதோ அது போலவே இணையதளங்களில் தமிழ் இனிமையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.