கோகுல்ராஜ் கொலை வழக்கின் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.


2015-ல் ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள்  தண்டனையை எதிர்த்து யுவராஜ் உட்பட 10 பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கோகுல்ராஜின் தாயாரும் மேல்முறையீடு செய்திருந்தார்.


அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.


வழக்கு:


கோகுல்ராஜ் கொலை வழக்கில்  ஆயுத தண்டனை உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 


இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.


Also Read: EPS Press Meet: "வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு..! அ.தி.மு.க. எழுச்சி பெறும்..!" - ஆனந்தத்தில் எடப்பாடி பழனிசாமி


Also Read: Rajaji Great Grandson: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் - என்ன காரணம்?