Flood Risk Warning Update: செவித்திறன் குறைபாடு உடையோருக்கான வெள்ள அபாய முன்னெச்சரிக்கை

மாற்றுத்திறனாளிகள் வெளியேறும் போது உங்கள் ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் உங்கள் உதவி சாதனங்களையும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Continues below advertisement

சென்னையில் தொடர் கனமழை பெய்து வருவதால், செவித்திறன் குறைபாடு உடையோருக்கான வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவல்கள் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

வெள்ள அபாய எச்சரிக்கை: அடையாறு ஆற்றின் கீழ் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகள் வெளியேறும் போது உங்கள் ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் உங்கள் உதவி சாதனங்களையும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

 


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வந்த மழை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டிவருகிறது.

இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, விடிய விடிய பெய்துகொண்டிருக்கும் மழையால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு வருபவர்கள் தங்களது பயணத்தை 2, 3 நாள்கள் ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

1913, 04425619206, 044 - 25619207, 044 - 25619208 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.

மேலும் 9445477205 என்ற வாட்ஸ் அப் மூலமும் புகாரை தெரிவிக்கலாம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola