டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் இன்று திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய தி.மு..க அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் பங்கேற்றனர். இந்த நிலையில், விழாவில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியனின் செல்போன் மாயமாகியுள்ளது.


அவரது கைப்பையில் வைத்திருந்த விலையுயர்ந்த ஐ போன் விழாவின் போது மாயமாகியுள்ளது. எம்.பி.யின் செல்போன் காணாமல்போனது அந்த நிகழ்ச்சியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்ற நிகழ்வில் தி.மு.க.வைச் சேர்ந்த பெண் எம்.பி.யின் செல்போன் மாயமாகி இருப்பது தற்போது பரபரப்பாகியுள்ளது.


தமிழச்சி தங்கப்பாண்டியன் செல்போனை எங்கேனும் மறந்து வைத்துவிட்டாரா? அல்லது யாரேனும் திருடிவிட்டனரா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.