DVAC Raid: தங்கம் மட்டுமே 4.8 கிலோ.. 136 கனரக வாகனம்.. விஜயபாஸ்கர் வீட்டு ரெய்டில் சிக்கியவற்றின் லிஸ்ட்.!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டில்  ரொக்கமாக ரூ.23,85,700 பணமும், 4.8 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தங்க நகைகளின் மதிப்பு ரூ. 2.17 கோடி ஆகும்.

Continues below advertisement

மேலும், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டது. அது தொடர்பாக ரூ.23, 82,700 பணமும், ஹார்டு டிஸ்குகளும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்

முன்னதாக,2016-21 வரையிலான ஐந்து ஆண்டு காலகட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திட்டமிட்டு வருமானத்துக்கு அதிகமான வகையில் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில், விஜயபாஸ்கர் முதல் குற்றவாளியாகவும், அவரின் ரம்யா இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  


இந்நிலையில், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, அவரது மூத்த மகள் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் போது, மனிதாபிமானமற்ற முறையில் சோதனை நடைபெற்று வருவதாக அதிமுக வழக்கறிஞர்  பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.  

இருப்பினும், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, அவரது மூத்த மகள் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உண்மைதான் என்றாலும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தில் இருந்து நேற்று தான் அவர்கள் வெளியே வந்தார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட முதல் தகவல் அறிக்கையின் படி,  முதல் குற்றவாளியான விஜயபாஸ்கர்  M/s Rasi Blue Metals என்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும்,  M/s. Green land Hi-tech Promoters  என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும், Sri Vari Stones (p) Ltd and Iris Eco Power venture (p) Ltd ஆகிய நிறுவனங்களின் முதலீட்டாளராகவும் உள்ளார். 

இரண்டாவது குற்றவாளியான ரம்யா அவரின் துணைவியர். இல்லத்தரசியான இவர் M/s. Rasi Enterprises, V Infrastructure and Anya Enterprises ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார். ஆனால், இந்த நிறுவனங்களின் ஒற்றை முதலீட்டாளாராக விஜயபாஸ்கர் உள்ளார்.       

2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் மட்டும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் 57 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையியனர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில், இழுப்பூர் கிராமத்தில் விஜயபாஸ்கரின் குடும்ப உறுப்பினர்கள் பேரில் மதர் தெரசா கல்வி மற்றும் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் 14 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் தான் இந்த கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.    

Continues below advertisement
Sponsored Links by Taboola