Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,259  பேருக்கு கொரோனா தொற்று 20 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் 1,259  பேருக்கு கொரோனா தொற்று 20 பேர் உயிரிழந்தனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்று 1,37,423  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,259 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 163  பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 20  பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். நேற்றைவிட உயிரிழப்பு அதிகம். 1438 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Continues below advertisement

 

சென்னையில் 163 பேரும், கோயம்புத்தூரில் 143 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும், ஈரோட்டில் 79  பேரும், திருப்பூரில் 74 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மட்டும் 10 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட ஒருவருக்கு தொற்று அதிகம். இதுவரை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 107 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 566 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 10 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 24 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்காததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியானவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 312 ஆக தொடர்கிறது.

 

கரூர் மாவட்டத்தில் புதிதாக 11 நபர்களுக்கு தொற்று பாதிப்பு. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 23,788 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் 24 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் 23,250 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 355 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 183 ஆகும். 

Continues below advertisement