தமிழ்நாட்டில் இன்று 1,30,251  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,233 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 160  பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15  பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1434 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.






சென்னையில் 160 பேருக்கும், கோயம்புத்தூரில் 136 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும், ஈரோட்டில் 97  பேருக்கும், தஞ்சாவூரில் 71 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 






 


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மட்டும் 15 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட ஆறு பேருக்கு தொற்று அதிகம். 


மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும்  19 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74961-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 25 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 


சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இருவர் பேர் உயிரிழப்பு. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1678 ஆக உள்ளது. மேலும் 62 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 96,752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,993 ஆக உயர்வு. மாவட்டத்தில் 563 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 54 பேர் பாதிப்பு. தொடர்ந்து ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா நோய் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.


புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 48 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.