விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஷேக்காதர் அலி இவர் சாலாமேடு பகுதியில் உள்ள தனது இரண்டரை ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளுக்காக 30 வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்துள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் இடத்திற்கு உரிய விலை அளிக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சதுரடிக்கு 25 ரூபாய் வழங்க வேண்டும் என கோரி வழக்கு ஒன்றை தொடுத்ததன் அடிப்படையில் சதுரடிக்கு 16 ரூபாய் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு கடந்த 2013 ஆம் ஆண்டு பிறப்பித்து இருந்தது


ஆனால் தற்போது வரை அவருக்கு உரிய தொகை வழங்கப்படாததால் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழக்கு தொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு சொந்தமான அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.


அதன் அடிப்படையில் இன்று அரசு நீதிமன்ற அலுவலர் மற்றும் தனது வழக்கறிஞர்கள் உடன் வந்த ஷேக்காதர் அலி விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் உள்ள  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை செயற்பொறியாளர் அலுவலகத்தில்  அலுவலகத்திற்கு சொந்தமான மேசை பீரோ உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஜப்தி செய்தார். அரசு அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கும்போது நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.