கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக கூறி சட்டத்துறை அமைச்சகம் சார்பில் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 


கூட்டுறவு சங்க மசோதா கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 5 ஆண்டு பதவிகாலத்தை 3 ஆண்டாக குறைத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 


ஆளுநர் ஒப்புதலுக்கு தாமதமாகி வந்த நிலையில் சட்டத்துறை அமைச்சகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.