தமிழ்நாட்டில் வரும் 19-ந் தேதி(சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


காணொலி மூலமாக பரப்புரையில் ஈடுபட்ட அவர், தமிழ்நாட்டில் உள்ள மகளிர்களுக்கு ரூபாய் 1000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று பேசினார்.