தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18-ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். 


அதனை அடுத்து விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது, ”வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் 68.375 கோடி ரூபாயில் 2.05 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் போடப்பட்டுள்ளது.


துபாய் பயணத்தில் 12,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டி.பி வேர்ல்டு, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. துபாயில் எரிசக்தி, சரக்கு போக்குவரத்து திட்டங்கள், மின்னணுவியல் திட்டங்களில் அதிக அளவிலான முதலீட்டை ஈர்க்க உரையாடினேன். விரைவில் இந்த முதலீடு தொடர்பாக பணிக்குழு அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். 



மேலும், பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது அமர்வு வரும் 6ஆம் தேதி தொடங்கி மே மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்க உள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்ச்சி நிரல்:


6-4-2022: நீர்வளத்துறை 


7-4-2022:  34 - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை


                   42 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை


8-4-2022: 12- கூட்டுறவு


                 13-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு


9-4-20322 (சனிக்கிழமை): அரசு விடுமுறை


10-4-2022(ஞாயிற்றுக்கிழலை): அரசு விடுமுறை




மேலும் படிக்க: Coimbatore: கோவையில் பாதுகாப்பு தொழில் நிறுவனம் - அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் தகவல்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண