தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை இனி மாநிலமே உற்பத்தி செய்யும் என அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.’நமக்கு நாமே’ என அவர் களமிறங்கியிருக்கும் இந்த திட்டம் இன்று நேற்று உருவானதல்ல. எடப்பாடி பழனிசாமியின் முந்தைய அமைச்சரவையிலேயே அதற்கான யோசனைகள் எழுந்தன. இருந்தும் அன்று எடப்பாடி கோட்டைவிட்டதை இன்று எட்டிப்பிடித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கொரோனா முதல் அலைக்காலத்திலேயே பொருளாதாரத்தின் மீதான கொரோனாவின் தாக்கத்தை ஆராய தமிழக அரசு கமிட்டி ஒன்றை நிறுவியது. இந்தியப் புள்ளியியல் கழகத் தலைவர் சி.ரங்கராஜன் அதற்குத் தலைமை வகித்தார். மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் உற்பத்தித் துறையை வளர்ந்துவரும் துறையாகப் பரிந்துரைத்தது அவரது குழு. ஆனால் போதுமான ஆக்சிஜன் இருப்பு, மருத்துவமனைகள் விரிவாக்கம்- மேலும் தீவிரத்தன்மை தனிந்ததை எல்லாம் காரணம் காட்டி எடப்பாடி அரசு அந்தப் பரிந்துரையை ஓரங்கட்டியது.
யோசித்தும் கோட்டைவிட்ட எடப்பாடி.. சிக்ஸர் அடித்த முதல்வர் ஸ்டாலின்
ஐஷ்வர்யா சுதா | 19 May 2021 05:23 PM (IST)
இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி நோ பால் என நினைத்து விளகிய பந்தில் சிக்ஸர் அடித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி
Published at: 19 May 2021 05:09 PM (IST)