தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தொற்று தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.  இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில்  மத்திய அரசு கட்டுப்பாட்டில் இந்தியா முழுவதும் உள்ள தொல்லியல் துறை புராதன சின்னங்களை  மூட உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். ஆனால் இன்று 16.04.21 முதல் மே மாதம் 15 ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என பதாகைகள் வைக்கப்பட்டு மலைக்கோட்டையின் அடிவாரத்திலுள்ள கதவுகள் மூடப்பட்டுள்ளது.