பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அதன் பின் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் செய்தி தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை அப்படியே இதோ...


வாழ்த்துச் செய்தி






"நான் பேசுவது. எழுதுவது. சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே. என் நேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல" என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர். திருமகனார் தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர்!


'மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாளத கொடுக்க வேண்டுமே தவிர சாதியால் அல்ல' என்று சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக


முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார் அளனவருக்குமான தலைவர் அவர்


பக்குவப்பட்ட ஒருவன். இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும் கிறித்துவ வராகத்தில் வைக்கிற மெழுகுவத்தி ஒளியையும் - முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டைப் போக்சு எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாகக் காண்பான்' என்று சொன்ன மதரல்லிணக்க மாமனிதர்!


தனியாக இருக்கும்போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள் கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்" என்று சொன்ன தத்துவஞானி!


'நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும் - அதேநேரத்தில் எறும்பு கடிக்கும் போது கோபம் வராமல் வருடிக் கொடுக்கும் பொறுமைக் குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும்" என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை!


"முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்” என்று முழங்கிய தமிழ் ஆளுமை


பசும்பொன் உமுத்துராமலிங்கத் தேவர் முன்மொழிந்த இந்த முத்துமொழிகளைப் பின்பற்றி நடப்பதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையாள அஞ்சலி!


வாழ்க அவரது புகழ்! வெல்க அவரது சிந்தனைகள்!


மதுரையில் இருந்து பசும்பொன் வரை முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய வீடியோ இதோ...






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண