Minister Sekar Babu: சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

Continues below advertisement

பட்ஜெட்:

கடந்த 20ஆம் தேதி நிதிநிலைக்கான பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் நேற்று முதல்  பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

இந்த பட்ஜெட் மீதான விவாதம் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தொடரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதன் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் வகையிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழு தலைவரும், அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமையில், கடந்த 2021-2022 மற்றும் 2022-2023 சட்டமன்ற கூட்டத்தொடர் அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும், மூன்றாவது முழுமைத் திட்டம் - தொலைநோக்கு, நில சேர்மம், தள பரப்புக் குறியீடு, கிளாம்பாக்கம் வழக்குகள் நிலவரம், பேருந்து நிலையம், நீதிமன்ற வழக்குகள் நிலவரம் திட்டம் கோயம்பேடு மொத்த விற்பனை வளாகம் குறித்தும் அலுவலர்களுடன் விரிவான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப. அவர்கள். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள். தலைமை திட்ட அமைப்பாளர்கள். முதுநிலை திட்ட அமைப்பாளர்கள். மாவட்ட வருவாய் அலுவலர்கள், மேற்பார் பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க

CM Stalin : "போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திடுவோம்” - முதலமைச்சர் ஸ்டாலின்