Rain Alert : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Continues below advertisement

கனமழை
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Continues below advertisement
தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேல்பவானி, திருப்பூர், ஓமலூர், குமாரபாளையம், கேட்டி, பரளியாறு, பந்தலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வரும் 17-ந் தேதி வரை கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.