கார்த்திகை தீபத்தை ஒட்டி நேற்று சென்னையில் அனேக இடங்களில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளது. ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.


சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட்ட ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.


உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திரு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.


மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்றுவதற்காக, 3,500 கிலோ நெய் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தீபம் ஏற்றுவதற்கு தாமிரத்தால் ஆன (செப்பு)  ஐந்தரை அடி உயரமுள்ள புதிய மகா தீப கொப்பரை பயன்படுத்தப்படுகிறது.


திருவண்ணாமலை மட்டுமல்லாமல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் எற்றி வழிப்படுவர். கார்த்திகை தீபம் ஒட்டி தீபாவளி பண்டிகை போலவே பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள்.


நேற்றைய தினம் மாலை சென்னையில் அனேக பகுதிகளில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடப்பட்டதால், பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.




இந்த நிலையில், சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட்ட ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கார்த்திகை தீபம் பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் சென்னையில் 7 இடங்களில் காற்று மாசு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. 




காற்றின் தரக்குறியீடு படி, சென்னையில் அதிகபட்சமாக ஆலந்தூர்- 320, பெருங்குடி – 278, மணலி- 171, ராயபுரம் - 237, அரும்பாக்கம்- 210, கொடுங்கையூர் – 154, எண்ணூர் - 243  என்ற அளவீட்டில் காற்று மாசு பதிவாகியுள்ளது.




காற்று மாசு 0-50 ஆக இருந்தால் நல்ல நிலையில் சுவாசிக்க ஏற்றது. 51-100 வரை இருந்தால் ஏற்கனவே சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். 100-200 வரை இருந்தால் ஆஸ்த்மா நோயாளிகளுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும். 201-300 வரை இருந்தால் காற்றின் தரம் மோசமாக இருப்பதாகவும் தொடர்ந்து சுவாசித்தால் நுரையீரல் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 301 – 500 வரை இருந்தால் காற்றின் தரம் படு மோசமாக இருப்பதாகவும் சுவாசிக்க உகந்த காற்று இல்லை ஆரோக்கியமான மனிதர்களையும் கடுமையாக தாக்கும் என்பதாகும்.


சென்னையில் ஒட்டுமொத்தமாக மற்ற நாளில் 80 வரை இருக்கும் நிலையில் நேற்று 320 என காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. நகரில் தற்போது காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், தற்போது பலருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.


TN Rain Alert: இன்று மாலை உருவாகிறது புயல்... - தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த வானிலை!