தமிழ்நாடு:



  • திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் நேற்று, காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில்,  மாலை மகா தீபம் மலையின் மீது ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

  • இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால், நள்ளிரவு முதல் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

  • சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக விரைந்துள்ளது. 

  • அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் சிலையை ஆளுநர் ரவி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

  • தொலைதூரக் கல்வி மூலம் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் - சென்னை உயர் நீதிமன்றம் 

  • எடப்பாடி பழனிச்சாமி பக்கம்தான் 98.5% தொண்டர்கள் உள்ளனர் - முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன்


இந்தியா



  • மத்திய பிரதேசம்: அரசு சட்ட கல்லூரியில் மாணவிகள் நெற்றியில் பொட்டு வைக்கத் தடை

  • இன்று குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 

  • குளிர்கால கூட்டத்தொடர்: விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

  • டெல்லியை சேர்ந்த 26 வயதான பெண்ணின் 33 வார கருவை கலைக்க,  டெல்லி  உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

  • நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதற்கு காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.


உலகம்:



  • பஞ்சாப்பின் தார்ன் தரன் பகுதியில் காலியா என்ற கிராமம் அருகே, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் டிரோன் மூலம் 2.4 கிலோ எடை கொண்ட ஹெராயின் வகை போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

  • கொலாம்பியாவில் நிலச்சரிவு ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். 

  • ஆக்ஸ்ஃபோர்ட்டின் 2022-ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக ’Goblind Mode’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

  • கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையில் மீண்டும் விமான போக்குவரத்து சேவையை இலங்கை அரசு துவக்கவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு



  • சீனியர் பெண்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுபமன் கில், அடுத்த 10 ஆண்டுகளில் பல சாதனைகளை படைப்பார் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.

  • உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய நாக் - அவுட் சுற்றில் மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது. 

  • இந்தியா வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கவுள்ளது.