தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

திருவள்ளூர், நெல்லை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தருமபுரி, கரூர், பெரம்பலூர், மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

 மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 
 
18.05.2023 மற்றும் 19.05.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
 
20.05.2023 முதல் 22.05.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
 
அதிகபட்ச வெப்பநிலை : 
 
18.05.2023, 19.05.2023 & 20.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3  டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
 
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
 
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):   

அமராவதி அணை (திருப்பூர்) 3,சூலூர் (கோயம்புத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP  (கோயம்புத்தூர்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) தலா 2, கிளென்மோர்கன் (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), பல்லடம் (திருப்பூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), கூடலூர் பஜார் (நீலகிரி), கெட்டி (நீலகிரி), கோயம்புத்தூர் விமான நிலையம், சின்கோனா (கோயம்புத்தூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), பழனி (திண்டுக்கல்), கங்கவல்லி (சேலம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்) தலா 1.

Continues below advertisement