தமிழ்நாட்டில்தான் சாதி பாகுபாடு அதிகம் எனவும் தீண்டாமைக் கொடுமைகள் இன்னும் ஒழியவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் தமிழ் சேவா சங்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தனது பேச்சில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமைத்த உணவை சாப்பிட மறுக்கும் தீண்டாமைக் கொடுமை தமிழ்நாட்டில் இன்னும் உள்ளது. கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலப்பது உள்ளிட்ட கொடுமைகளும் தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை அதிகம் நிலவுவதாகவும் ஆளுநர் ரவி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.