சென்னை திருவல்லிக்கேணியில் பெண் இன்ஸ்பெக்டருக்கு வந்த சாக்லெட் முத்திரி பருப்பு பார்சலால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.


சென்னை திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக இருப்பவர் கலைச்செல்வி. இவருக்கு நேற்று முன்தினம் இரவு ஒருவர் பார்சல் ஒன்றை கொண்டு வந்தார். அந்த பார்சல், 'பரிசு பார்சல்' என்றும், காவல் ஆய்வாளர் கலைச்செல்வியிடம்தான் கொடுப்பேன் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.


காவல் ஆய்வாளர் கலைச்செல்வி பணி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அந்த பார்சல், உதவி கமிஷனர் பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் கலைச்செல்வி அந்த பார்சல் தனக்கு வந்தது இல்லை எனக்கூறி வாங்க மறுத்துவிட்டார். 


இதனால் அந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது. அது வெடிகுண்டு பார்சலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. வெடிகுண்டு 
நிணர்கள் வந்து பார்சலை மோப்ப நாய் உதவியுடன் எடுத்துச்சென்றனர். கலைவாணர் அரங்கம் பின்புறம் உள்ள மைதானத்தில் வைத்து வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலை பிரித்து பார்த்தனர்.


அப்போது அது வெடி குண்டு பார்சல் இல்லை என்பது தெரிய வந்தது. அது உண்மையிலேயே பரிசு பார்சல். அதற்குள் முத்திரி பருப்பு, பாதாம், திராட்சை மற்றும் சாக்லெட் போன்ற பொருட்கள் இருந்தன. வெடி குண்டு பார்சல் என்று பெரும் பிதியை ஏற்படுத்திய பார்சல், பரிசு பார்சலாக இருந்ததால் பெரும் சிரிப்பலை உருவாகியது. 


சாதாரணமாக பார்க்கும்போது இது பெரிய விஷயம் இல்லை என்றாலும் ஒரு காவல் பணியில் இருப்பவர்களுக்கு பல எதிரிகள் இருக்கலாம் என்பது நிதர்சனமான உண்மை. அதனால் அவர்களின் பயத்திலும் ஒரு அர்த்தம் உள்ளது என்றே பார்க்கப்படுகிறது. 


தற்போது அந்த பார்சலை கொண்டு வந்த நபர் யார்? என்று போலீசார் அடுத்த விசாரணையை தொடங்கி உள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வாயிலாக இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


 


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடியூபில் வீடியோக்களை காண