கேரள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் புறப்பட்டுச் சென்றார்.




பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கு.ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 60 பேரை போலீசார் கைது செய்தனர்.