சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் என மொத்தம் 29 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


எங்கெல்லாம் மிதமான மழை


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அதேபோல் திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் தர்மபுரி மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டத்திலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


 


வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைப் போல் சென்னை மட்டும் இல்லாமல் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இதனால் மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. மற்ற அரசு அலுவலகங்களும் பொது சேவை நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 


இதுமட்டும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.