விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதைபொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பின்வரும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின் படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.

Continues below advertisement

அனைத்து வகை இல்லங்கள் மற்றும் விடுதிகள் உரிமம் பெற விண்ணபிக்கலாம்

குழந்தைகள் இல்லங்களை, குழந்தைகளை நலன் (ம) சிறப்புச்சேவைகள் துறையின் மூலம் இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015ன் கீழும், முதியோர் இல்லங்களை, சமூகநலத்துறையின் மூலம் மூத்த குடிமக்களுக்கான சட்டம், 2007ன் படியும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம்.

2007ன்  படியும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (State Mental Health Authority) மூலம் மனநல பாதுகாப்புச் சட்டம், 2017 சட்டத்தின் படியும், பெண்கள் (ம) குழந்தைகளுக்கான விடுதிகளை சமூக நலத்துறை கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான (ஒழுங்குமுறை) சட்டம், 2014ன் படியும், மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (State Mental Health Authority) மனநல பாதுகாப்புச் சட்டம், 2017ன் படியும் பதிவு செய்யவேண்டும்.

Continues below advertisement

விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம்

அவ்வாறு பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், LDOOT வளர்ச்சி குன்றியோர்கள். மாற்றித்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில்/அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.

குழந்தைகள் இல்லங்களை https://dsdcpimms.tn.gov.in (அல்லது) மாவட்ட குழந்தை நல அலுலவகம், முதியோர் இல்லங்களை www.seniorcitzenhomes.tnsocialwelfare.tn.gov.in (அல்லது) மாவட்ட சமூக நல அலுலவகத்திலும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php  அல்லது முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டும்,

குழந்தைகளுக்கான விடுதிகள்

மேலும் பெண்கள் (ம) குழந்தைகளுக்கான விடுதிகளை https://tnswp.com (அல்லது) மாவட்ட சமூக நல அலுலவகம் மூலமாகவும் மனநலம் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php முதன்மை செயல் அலுவலர், பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை , தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட வேண்டும். பெற்று கொண்டும் 

இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக மேற்காணும் இணையதளம் (Portal) அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.