டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.


டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கில், அவருக்கு எதிரான ஆதாரங்கள் முழு அளவில் திரட்டப்பட்டுள்ளது என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக குற்றம் சாட்டிய தமிழக அரசு, எஸ்பி. வேலுமணிக்கு எந்த வித சலுகையும் வழங்கக்கூடாது கேட்டுக்கொண்டுள்ளது.