பொதுச்செயலாளர் தேர்தல் எதிரொலி காரணமாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும்பணி நடைபெற்று வருகிறது. பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்வுக்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளநிலையில் அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit of support ( ஆதரவுக்கான உறுதிமொழி ) பெறும் அதிமுக தலைமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இதனை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, 2500 க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வழங்குகிறது.