கொரோனா வைரஸின் மூன்றாவது அலை உலக நாடுகளை சிறை பிடிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா மட்டுமின்றி உருமாற்றமடைந்த ஒமிக்ரான் வைரஸும் பரவுவதால் மக்கள் அச்சத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், முகக்கவசத்தை மறக்காமல் அணிய வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சகங்கள் தெரிவித்துவருகின்றன.


இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு லட்சமாக தற்போது கொரோனா பாதிப்பு பதிவாகிவருகிறது. தமிழ்நாட்டிலும் அதன் வேகம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசும் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருந்தாலும் தொற்று பரவல் வேகம் கட்டுப்படவில்லை. நேற்று மட்டும் ஏறக்குறைய 9,000 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும், 4,500 பேருக்கு தொற்று பரவியுள்ளது. 






இந்தச் சூழலில் மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். வடிவேலு, அருண் விஜய், சத்யராஜ், மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் என பலருக்கு கொரோனா பரவியுள்ளது. 




இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்துகொண்டாலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது என்னுடைய மோசமான நாள்களாக இருந்தாலும், நான் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்.






தற்போது நன்றாக உணர்கிறேன். தடுப்பூசிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Actor Sathyaraj Corona Positive | நடிகர் சத்யராஜ் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி.. பிரார்த்திக்கும் ரசிகர்கள்.