நடிகை மீனாவில் கணவர் வித்யாசாகர் நுரையிரல் செயலிழப்பால் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கிற்குப் பின், மவுனமாக இருந்த நடிகை மீனா, சற்று நேரத்திற்கு முன், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் சில கோரிக்கைகளையும், சிலருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு..




‛‛எனது அன்புக் கணவர் வித்யா சாகரின் இழப்பால் நான் மிகவும் வருந்துகிறேன்.  அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  தயவு செய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்.  இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் , எங்கள் குடும்பத்துடன் நின்று உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .  தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், எங்கள் முதலமைச்சர், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி,’’


என அந்த பதிவில் மீனா தெரிவித்துள்ளார். 






நடிகை மீனாவில் கணவர் வித்யாசாகர், நுரையீரல் பாதிப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலரும் பங்கேற்று, நடிகை மீனாவுக்கு ஆறுதல் அளித்த நிலையில், மகள் நைனிகாவுடன் கணவரின் இறுதிச்சடங்குகளை மீனா நடத்தியது, காண்போரை கண் கலங்கச் செய்தது. இந்நியைில் தான், மீனா சற்று நேரத்திற்கு முன் இந்த பதிவை செய்துள்ளார். தன் பிரைவசியை மீறி சில செய்திகள் வருவதால், அதை மனதில் வைத்து மீனா இந்த அறிக்கையை அளித்திருப்பதாக தெரிகிறது.