கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர் டி மலையில் ஜல்லிக்கட்டு போட்டியினை கரூர் மாவட்ட டிஆர்ஓ லியாகத் அலி மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழி செய்து வைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார். தற்போது வரை இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 225க்கு மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. காளைகளை அடக்க காளையர்களும் மல்லுக்கட்டி வருகின்றனர்.

இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு எவர்சில்வர்பாத்திரங்கள், ஃபேன், கட்டில் குக்கர், தங்க காசு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இரண்டாம் சுற்றும் முடிவு வரை 13 மாடுபிடி வீரர்கள், 2 பார்வையாளர்கள், 1 மாட்டின் உரிமையாளர் என 16 பேர் காயம் அடைந்துள்ளனர். இரண்டாம் சுற்று நிறைவடையும் நிலையில் இருந்த போது சோர்வின் காரணமாக தடுப்பு வேலை கம்பி ஓரமாக அமர்ந்திருந்த மாடு பிடி வீரர் வடசேரி பள்ளப்பட்டியை  சேர்ந்த சிவகுமார் 21. என்ற இளைஞரை மாடு குத்தியதில் வலது கண் பார்வை பறிபோனது. காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர் டி மலையில்  தமிழகத்தில் நாளை முன்னிட்டு 61 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. 756 காளைகள்  வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 362 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

 

இதில் வடசேரி அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவகுமார் என்ற இளைஞர் முதல் சுற்றில் இரண்டு காளைகளை அடக்கி அடுத்த இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார்.

 

 

இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் உடல் சோர்வு காரணமாக தடுப்பு கம்பி வேலியோரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று அவரை முட்டியதில் வலது கண் பார்வை முற்றிலும் பறிபோய் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

 

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் வந்தார். 21 வயதான மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.