சேலம் மாவட்டம் ஆத்தூர் எடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பெத்தநாயக்கன்பாளையம் கிராம் அருகே சென்றபோது அங்கு சிலரை ஏற்றுவதற்காக சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஆம்னி பேருந்தில் பின்னால் மோதியதில் லக்கேஜ் ஏற்றுக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் திருநாவுக்கரசு (65), ரவிக்குமார் (42), செந்தில்வேலன் (44), சுப்பிரமணி மற்றும் பேருந்தின் கிளீனர் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 



மேலும் விபத்தில் காயமடைந்த விஜயா (60) என்ற பெண்ணை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மிகுந்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாக விஜயா உயிரிழந்தார். உயிரிழந்த விஜயா உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ளது. மேலும் காயமடைந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 



இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உள்ளிட்டோ விபத்து நடந்த பெத்தநாயக்கன்பாளையம் கிராம் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தில் நேரில் சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.