கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து திருதொண்டர் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஒசூரில் இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓசூர் அடுத்த பாகலூர் பகுதி கூலிகானப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு குத்தகை விடப்பட்டுள்ளது. அப்போது கல்குவாரிக்கு லாரிகள் சட்ட விரோதமாக அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பாதையை பயன்படுத்தி வந்ததால். அந்த வழியாக இரண்டு லாரிகள்  எம்சாண்ட் ஏற்றி வந்தது  இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 5 ஆவது முறையாக  இன்று பார்வையிட்டு உள்ளதாகவும்.  இதுபோன்று  கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தினைப் பார்வையிட்ட போது இந்த இடத்தினை சமூக விரோதிகள் சட்டவிரோதமாக சாலைகள் அமைத்து கோவிலின் சொத்தை சட்ட விரோதமாகவும் கோவிலின் சொத்தை பயன்படுத்திள்ளார்கள். மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் கோவிலின் நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்கவும் கோவில் நிர்வாகத்திற்கு  தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த இடத்தின் வழியாக அத்துமீறி இரண்டு வாகனங்கள் வந்தது. அந்த வாகனங்களை தற்போது கைப்பற்றப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்தார். பின்னர்  சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார். 



வெளியூரில் திருடன்... உள்ளூரில் தலைவன்... விலங்கை உடைத்து விடுவிக்கப்பட்ட ரீல் KGF கைது!


அதேபோன்று தமிழகத்தில் அதிகமான கோவில்கள் சொத்துக்கள் இருக்கக்கூடிய பகுதி கிருஷ்ணகிரி மாவட்டம் குறிப்பாக ஓசூரில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த பகுதியில் மீட்கப்பட வேண்டி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நிலங்கள் அனைத்தும் முறையாக மீட்கப்படும். இங்கே நிறைய குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்க கூடிய கூட்டுக் கொள்ளையர்கள் இந்த துறையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருவதால் சரியான ஒரு வெற்றியை காண முடியாமல் உள்ளது.  அவர்கள்களை எடுப்பதற்காக கண்டிப்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார்.


தேசிய கொடி ஒரு சைவ கொடி.. மதுரை ஆதீனம் பேச்சு