EPS About TVK Vijay: 'அதிமுகவை பற்றி விஜய் பேசாமல் இருப்பது குறித்து மற்றவர்கள் ஏன் துடிக்கிறார்கள்' -இபிஎஸ்.

அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியதால் தான், அதிமுகவை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் விமர்சிக்கவில்லை.

Continues below advertisement

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது. "அதிமுக குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பேசாமல் இருப்பது குறித்து மற்றவர்கள் ஏன் துடிக்கிறார்கள் என தெரியவில்லை. அதிமுக மக்களுக்காக தொடங்கி, தொடர்ந்து மக்களுக்காக உழைக்கிற கட்சியாக உள்ளது. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். அப்படி இருக்கும்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை எப்படி விமர்சிப்பார் ? அவர் விமர்சிக்காதது மற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும் அந்த குறிக்கோளை முன்னிறுத்தியே அதன் தலைவர்கள் பேசுவார்கள். இதற்காக மற்றவர்கள் மற்றவர்கள் ஆதங்கப்படக்கூடாது.

Continues below advertisement

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுக்கு சேவை செய்பவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறோம். அதிமுக 50 ஆண்டு காலமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக அதிமுக திகழ்கிறது.

திமுக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்வது நம்பத் தகுந்ததாக இல்லை 3 ஆண்டு காலம் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாத திமுக கூட்டணி கட்சிகள் தற்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர் இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை திமுக கூட்டணியில் பிளவு இருப்பதாகவே மக்கள் பேசி கொள்கிறார்கள் என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே பட்டியலின மக்களின் வீடுகள் தாக்கப்பட்டதை தொலைக்காட்சியில் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் இதிலிருந்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கும், பட்டியலின மக்களின் மீதான தாக்குதலும் எப்படி இருக்கிறது என்பது தெரியவரும்.

அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைகள் ஈடுபடுபவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இனிமேல் இடம் கிடையாது" என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola