MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்? எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி

MK Stalin: சில அதி­மே­தா­வி­கள் அதி­கப்­பி­ர­சிங்­கித் தன­மா­கக் கேட்­டார்­கள்.நாங்­கள் ஏன் நடு­ராத்­தி­ரி­யில் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்?என எச் ராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

Continues below advertisement

நாங்­கள் ஏன் நடு­ராத்­தி­ரி­யில் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்? இந்தி திணிப்பு விவகாரத்தில்  தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் எச். ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Continues below advertisement

எச் ராஜா கருத்து: 

"ஹிந்தியை அழிக்க வேண்டும் என்றால், முதலில் சன் ஷைன் ஸ்கூலுக்கே போக வேண்டும். திமுகவில் உள்ளவர்கள் ஒருவராவது உப்பு போட்டு சாப்பிடுகிறவர் இருந்தால், முதலில் அந்த ஸ்கூலுக்கு போங்க. திமுகவில் மொத்தம் 48 சிபிஎஸ்இ ஸ்கூல்கள் உள்ளன. அந்த பள்ளிகளின் பட்டியலை நான் கொடுக்கிறேன். அந்த ஸ்கூல்களில் ஹிந்தி கற்று கொடுக்கலாமா என்று போராட்டம் நடத்துங்கள். முடிந்தால், 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்திய எழுத்துக்களை அழியுங்கள். நீங்கள் மானங்கெட்டவர்கள்!" என எச்.ராஜா  பேசியிருந்தார். 

முதல்வர் பதிலடி: 

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தி திணிப்பு விவகாரத்தில் கருத்துகளை தெரிவித்த ஆளுநர் ரவி மற்றும் பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்த அறிக்கையில்

எந்த மொழி மீதும் தமி­ழர்­க­ளுக்கும் தமிழ்­நாட்­டிற்­கும் தனிப்­பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்­த­தில்லை. எந்த மொழி­யா­வது திணிக்­கப்­பட்­டால் தமிழ்­நாடு போராட்­டக் களம் காணா­மல் இருந்­த­தில்லை,தேசிய கல்­விக் கொள்கை வழி­யாக மும்­மொ­ழித் திட்டம் என்ற பெய­ரில் இந்­தி­யைத் திணிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் சதி­யினை உணர்ந்­து­தான் ஒட்­டு­மொத்த தமிழ்­நா­டும் அதனை எதிர்க்­கி­றது. தமி­ழுக்­கும் தமி­ழர்­க­ளுக்­கும் எதி­ரா­கவே என்­றென்­றும் சிந்­திப்­ப­தை ­யும், தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து வஞ்­சிப்­பதை­யுமே தனது கொள்­கை­யா­கக் கொண்­டி­ருக்­கிற பா.ஜ.க. ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜெண்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை ஆத­ரித்து பேசிக் கொண்­டி­ருப்­பார்­கள். மாண்­பு­மிகு ஆளு­நர் ஆர்.என்.ரவி அது போலப் பேசி­யி­ருப்­பது புதி­ய­து ­மல்ல, பொருட்­ப­டுத்த வேண்­டி­ய­து­மல்ல.

ஆடு நனை­கி­றதே என்று ஓநாய் அழுத கதை­யாக,தமிழ்­நாட்­டின் இரு­மொ­ழிக் கொள்­கை­யால் தென்­னிந்­திய மொழி­க­ளைப் படிக்­கின்ற வாய்ப்பு தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை என புதுச்­ச­ரடு விடு­கி­றார் ஆளு­நர். உத்­த­ரப்­பி­ர­தே­சம், மத்­தி­யப்­பி­ர­தே­சம், பீகார் என பா.ஜ.க.வும், பா.ஜ.க. கூட்­ட­ணி­யும் ஆட்சி செய்­கின்ற வட இந்­திய மாநி­லங்­க­ளில் எத்­தனை வட­இந்­திய மொழி­க­ளைப் பள்­ளி­க­ளில் கற்­றுத் தரு­கி­றார்­கள்? ஆளு­ந­ரி­ட­மும் பதில் இருக்­காது. அவ­ரைப் பேச வைப்­ப­வர்­க­ளி­ட­மும் பதில் இருக்­காது.

எச்.ராஜாவுக்கு காட்டமான பதில்:

ரயில்­நி­லை­யத்­தில் உள்ள இந்தி எழுத்­து­களை அழிக்­கி­றீர்­களே? ரூபாய் நோட்­டில் உள்ள இந்தி எழுத்­து­களை அழிக்க வேண்­டி­ய­து­தானே? என்று அப்­போ­தும் சில அதி­மே­தா­வி­கள் அதி­கப்­பி­ர­சிங்­கித் தன­மா­கக் கேட்­டார்­கள். நாங்­கள் ஏன் நடு­ராத்­தி­ரி­யில் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்?ரூபாய் நோட்­டில் இந்தி மட்­டுமா உள்­ளது? அந்­தந்த மாநில மொழி­க­ளுக்­கு­ரிய உரி­மையைநிலை­நி­றுத்­தும் முறை­யில்,அர­சி­யல் சட்­டத்­தின் எட்­டா­வது அட்­ட­வ­ணை­யில்உள்ள தமிழ் உள்­ளிட்ட மொழி­கள் ரூபாய் நோட்­டில் அச்­சி­டப்­பட்­டுள்­ளன. ரூபாய்நோட்­டில் இருப்­பது மொழி சமத்­து­வம். ரயில்­வே­யி­லும் ஒன்­றிய அர­சின் மற்ற துறை­க­ளி­லும் நடப்­பது மொழித் திணிப்பு.

Continues below advertisement