100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்- மசோதா தாக்கல்
மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற புதிய மசோதா தாக்கல் செய்துள்ளது. மேலும் அதில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய அம்சர்கள் இருப்பதாகவும், மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை மத்திய அரசு செலுத்துவதாகவும் எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து இந்த மசோதா தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். இதனை விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவில், பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இபிஎஸ்யிடம் கேள்வி எழுப்பிய ஸ்டாலின்
இதற்கு பதில் அளிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிகைகயில், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, திமுக-வின் தேர்தல் அறிக்கையில், இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், மற்றும் ஊதியமும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார் . ஆனால் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. என தெரிவித்தவர், எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்! நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி!
அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, Delimitation மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
சவால் விடுத்த ஸ்டாலின்
ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய MGNREGS திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் VBGRAMG கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும். தனது 'Owner' பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.