ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுதான் சட்டப்பூர்வ சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தற்போதைய சிவசேனா , ஜனநாயக முறையில் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா தரப்புக்கு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சிவசேனா முடக்கம்:


சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக பிரிந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.


கட்சியின் பெரும்பாலான எம்.எல்,ஏ.க்களின் உதவியாலும், பாஜகவுடனான கூட்டணியாலும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது.


கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டுவந்த நிலையில், உண்மையான சிவசேனா யார்? கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் சமர்பிக்கப்பட்டன.






நவம்பர் 3ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து, வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைக்காலத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.


ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒதுக்கீடு:






இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுதான் சட்டப்பூர்வ சிவசேனா என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா தரப்புக்கு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான தரப்பு , உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Also Read: Erode East By Election: ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான், முதுகெலும்பை நிமர்த்தி பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி எம்.பி