பிரியங்கா காந்தி சென்ற கான்வாய் நடுவே காரை நிறுத்திய நபர்: துண்டாக தூக்கிய போலீஸ்

Priyanka Gandhi Convoy: வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி சென்று கொண்டிருந்த கான்வாயை இடைமறித்ததாக கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்,

Continues below advertisement

கேரளம் மாநிலத்தில், வயநாடு தொகுதி எம்.பி பிரியங்கா காந்தி சென்று கொண்டிருந்த ( கான்வாய் ) பாதுகாப்பு வாகனங்களை தடுத்ததாகக் கூறி, ஒரு யூடியூபர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக எலநாடு பகுதியைச் சேர்ந்த அனீஷ் ஆபிரகாம் என்பவரை மன்னுத்தி போலீசார் கைது செய்து, பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Continues below advertisement

Also Read: நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்! எப்படி பெறுவது? எதனால்? யாருக்கு தேவையில்லை?

பிரியங்கா காந்தி கான்வாயை மறித்து யூடியூபர்:

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கேரளம் மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பியுமான பிரியங்கா காந்தி, கடந்த சனிக்கிழமை வயநாடு தொகுதிக்குச் சென்றார். அங்கு, அவரது தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையடுத்து, இரவு சுமார் 9:30 மணியளவில், மலப்புரத்திலிருந்து கொச்சி விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில், ஒரு நபர் திடீரென, பிரியங்கா காந்தி சென்று கொண்டிருந்த கான்வாய்க்கு நடுவே, அவரது காரை குறுக்கே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மன்னுத்தி துணை ஆய்வாளர் தலைமையிலான காவல் குழு  அகற்ற முயன்றபோது, ​​அவர் காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அந்த நபர் கேரள மாநிலம் எலநாடு பகுதியைச் சேர்ந்த அனீஷ் ஆபிரகாம் என்பதும், அவர் ஒரு யூடியூபர் என்றும் தெரியவந்துள்ளது. 

Also Read: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நோபல் பரிசுக்கு பரிந்துரை! ஆனால் சிறையில் இருக்கிறார்!

ஹாரன் சத்தம் காரணம்?

இந்நிலையில், அனீஷ் ஆபிரகாம் மீது, வேண்டுமென்றே வாகனத் கான்வாயை தடுத்தமை, உயிருக்கு ஆபத்து விளைவித்தமை மற்றும் காவல் உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வயநாடு எம்.பி பிரியங்கா காந்தியை அழைத்துச் சென்ற வாகனத்தின் ஹாரன் சத்தத்தால்,  ஆபிரகாம் விரக்தியடைந்ததாகவும், இதனால் வாகன கான்வாய்க்கு முன்னால் அவரது காரை நிறுத்தியதாகவும் அவரது தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

Also Read: Optical Illusion: சிங்கம் மறைந்திருக்கிறது...30 வினாடிகளில் கண்டுபிடித்தால், நீங்க மாஸ்தான்!

Continues below advertisement