என்எல்சிக்கு திமுக ஆதரவு தெரிவிப்பது ஏன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
Continues below advertisement

பாமகவின் நிதிநிலை அறிக்கை
விழுப்புரம்: என்எல்சி நிர்வாகத்தினர் 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாலைவனமாக்கிய நிலையில் எல்லாவற்றிற்கும் மத்திய அரசை எதிர்க்கிற திமுக அரசு ஏன், என்எல்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறது என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ் கலைஞருக்கு பேனாவை அவரது நினைவிடத்திலையே அமைக்க வலியுறுத்தியுள்ளார்.
திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதி நிலை அறிக்கையை 21வது ஆண்டாக இன்று வெளியிட்டனர். அதன்பின்பு பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தமிழகத்தின் நிகர கடன் அடுத்த ஆண்டு ஒரு லட்சம் கூடுதலாக இருக்கும் எனவும் 2024 ஆம் ஆண்டு தமிழகத்தின் கடன் 7 லட்சத்து 53 கோடியாகவும், மின்வாரியத்தில் 47 சதவிகிதம் மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் தமிழக அரசின் நேரடி கடன் 12 .53 லட்சம் கோடியாக இருக்க கூடும் என தெரிவித்தார். இட ஒதுக்கீட்டில் உள் ஒதுகீடாக 20 சதவிகிதம் ஒதுக்கப்படும் என்றும் அதில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் வழங்கப்படுமெனவும் சுங்கச்சாவடி 60 கிலோ மீட்டருக்கு ஒன்று என்று அமைக்கப்படுமென நிழல் நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிகாட்டினார்.
என்எல்சி நிர்வாகம் நெய்வேலியில் விவசாயிகள் நிலத்தினை கையகப்படுத்தக் கூடாது அவர்களுக்கு அங்கு அந்த நிலத்தின் தேவையும் இல்லை என்றும் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை என்எல்சி நிர்வாகம் தமிழகத்துக்கு 800 மெகா வாட் மின்சாரம் கொடுத்து 5 மாவட்டங்களை அழித்து வருவதாகவும் என்எல்சி நிர்வாகத்தினரால் நிலத்தடி நீர் மட்டம் 400 அடி அளவிற்கு சென்றுவிட்டதாக குற்றஞ்சாட்டினார். என்எல்சி நிர்வாகத்தினர் 40 ஆயிரம் ஏக்கரை பாலைவனமாக மாற்றியுள்ளதாகவும், என் எல் சிக்கு தமிழக அரசு ஆதரவளிப்பதாகவும், எல்லாவற்றிற்கும் எதிர்க்கிற அரசு இதற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறது பத்தாயிரம் ஏக்கர் நெய்வேலியில் உள்ளது அதில் மின்சாரம் அடுத்த 30 ஆண்டுகள் வரை எடுக்கலாம் என கூறினார்.
என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்கு ஒரு நாள் அடையாள கடையடைப்பு பாமக சார்பில் நடத்தபட்டது மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாகவும் ஒரு நாள் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்த வணிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர் மக்களின் ஆதரவோடு என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டம் நடத்தி உள்ளதால் இதற்கு அப்பறமும் இதனை நிறுத்தவில்லை என்றால் வேறு விதமான போராட்டத்தை கையில் எடுப்போம் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
என்எல்சி நிர்வாகத்தினரால் தமிழகத்திற்கு முதலீடும் வேலைவாய்ப்பும் இல்லை என்றும் விவசாயம், சுற்றுச்சூழல், நிலத்தடி நீரை பாதுக்காக்க என்எல்சி நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். போதை பொருட்கள் கொரனோ காலகட்டத்தில் அதிகம் பள்ளிகளுக்குள் வந்துள்ளது. அதனால் தான் நான்கு மண்டலமாக பிரித்து தனிப்பிரிவை அமைத்து போதையை தடுக்க வேண்டும் போதையை தடுக்க மட்டுமே மாதம் தோறும் தமிழக முதலமைச்சர் கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.ஆன்லைன் ரம்மி சூதாட்டினை தடை செய்ய பாமக கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் தடை சட்டம் கொண்டு வந்தனர்.
இந்த சட்டம் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தது. ஆன்லைன் தடை சட்டம் கொண்டு வராததால் 18 பேர் உயிரிழப்புக்கு ஆளுநர் தான் காரணம் என்ற பகிரங்க குற்றச்சாட்டை வைப்பதாகவும் வருகின்ற கூட்ட தொடரில் இதற்கான தடை சட்டத்தினை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். ஏற்கனவே 10 மாநிலங்களில் தடை சட்டம் உள்ள போது 142 நாட்கள் ஆளுநர் எதற்காக கையெழுத்திடாமல் வைத்திருந்தார் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மீனவர்கள் கைது செய்யபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி முதல்வர் தீர்வு காண வேண்டும் கலைஞர் கருனாநிதி மீது மிகப்பெரிய பற்று உள்ளது. மெரினா கடற்கரையில் கலைஞருக்கு சமாதி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார். அதனால் தான் நாங்கள் அவரது உடல் அடக்கம் செய்யும் போது நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கை திரும்பபெற்றோம். அடக்கம் செய்யப்பட்ட இடத்திலையே கலைஞருக்கு பேனா அமைக்க வேண்டும் சூற்றுச்சூழலை பாதுக்காக்கும் வகையில் கடலில் சிலை அமைக்க கூடாது என அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.