மயிலாடுதுறையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'மாமனிதன் வைகோ" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதில், கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டு, திரைப்படத்தை பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் அமர்ந்து பார்த்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறியதாவது:




"ம.தி.மு.க.வின் வாக்கு வங்கி கடந்த 10 ஆண்டுகளில் சரிவாக இருந்தது. இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக 29 ஆண்டுகள் இருந்தேன். நான் நேரடி அரசியலுக்கு வந்த பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. தி.மு.க.வுக்கு அடுத்ததாக தாங்கள்தான் என்ற போலியான பிம்பத்தை பாரதிய ஜனதா கட்சியினர் உருவாக்குகின்றனர். பாரதிய ஜனதா கட்சிக்கு என்ன ஆதரவு உள்ளது? என்பது தேர்தல் நேரத்தில் தெரியும். தி.மு.க. ஆட்சி திருப்தியளிக்கும் வகையில் இருக்கிறது. எல்லா இடத்திலும் ஒரிரு குறைகள் இருக்கும். அதனை பாரதிய ஜனதா கட்சி மிகைப்படுத்தி தவறான பிம்பத்தை  உருவாக்குகின்றனர்" என்றார். 




திமுக அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கூறுகையில், "அமைச்சர் கூறிய விதம் தவறாக இருக்கலாம். ஆனால், அதனை வெட்டி ஒட்டி இணையதளத்தில் வெளியிட்டு திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்" என்றார். "நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவெடுக்கும் கட்சி உறுப்பினர்கள் விருப்பபட்டால் நிச்சயம் போட்டியிடுவேன்" என்றார்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உணவுப் பஞ்சம் ஏற்படும். அதனை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, "மத்திய அரசிடம்தான் அனைத்து நிதிகளும் உள்ளன. ஆனால் மத்திய அரசே இவ்வாறு கூறுவது நோயாளியிடம் மருத்துவரே நீ சாகப்போகிறாய் தயாராக இருந்துகொள் என்று கூறுவதைப் போன்று உள்ளது. இழந்ததை மீட்போம் என்ற இலக்குடன் மதிமுக செயல்படுகிறது" என்றார்.  இதில், திமுக சட்டமன்ற உறுப்பினர் (பூம்புகார்) நிவேதா முருகன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (மயிலாடுதுறை)  ராஜகுமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு திரைப்படத்தை பார்வையிட்டனர்.


மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை!


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நான்கு மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வாயில் கதவுகளை மூடினர். அலுவலகத்தில் உள்ளே உள்ள நபர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பொதுமக்களும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. 




உள்ளே உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக  குற்றசாட்டு உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொள்வது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற