நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் அமேசான் மூவிஸில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டரில், நடிகர் சூர்யாவை கடுமையாக சாடியுள்ளார். இந்தி மொழி தொடர்பான விவகாரம் வந்த போது, தமிழ், ஆங்கிலம் கற்றால் போது, மூன்றாவது மொழியாக இந்தி கற்கத் தேவையில்லை என்ற கருத்தை நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், ஜெய்பீம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. இதை சுட்டிக்காட்டி தான் ராஜா தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 






‛‛நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம்’’


என்று ஹெச்.ராஜாவின் இந்த ட்விட்டர் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஜெய்பீம் படம் வெளியான நிலையில் இதுவரை பாராட்டு பதிவுகள் மட்டுமே வெளியான நிலையில், முதன்முறையாக முக்கியத் தலைவர் ஒருவர் எதிர்ப்பு பதிவை செய்திருக்கிறார். 


ஜெய்பீம் தொடர்பான முக்கியச் செய்திகள் சில...


 






















மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண