காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள குலாம் நபி ஆசாத், ராகுல்காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையாலே 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்றும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல்காந்தியால் அல்லது அவரது உதவியாளரால் மட்டுமே எடுக்கப்படுகிறது என்றும், சோனியாகாந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக உள்ளார் என்றும் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.