EPS Speech: தி.மு.க. அமைச்சர்கள் 8 பேர் அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Continues below advertisement

மதுரை வலையங்குளத்தில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர் என தெரிவித்தார்

Continues below advertisement

மேலும், செந்தில் பாலாஜி பல கட்சிக்கு சென்று வந்தவர் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அப்போது, சமீபத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணனை மேடையில் வைத்துக் கொண்டு எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி:

மதுரை வளையங்குளம் பகுதியில் டாக்டர் சரவணன் தலைமையில் 10 ஆயிரம் பேர் வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க., வில்  எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கீழ் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கடும் வெயிலில் மதியமே அதிகளவு பெண்கள் திரட்டி வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.

அப்போது மேடையில் கட்சி நிர்வாகிகள் சிலர் பேசும் போது ”10 ஆயிரம் நபர்கள் இணையும் நிகழ்ச்சியில் 25 ஆயிரம் நபர்கள் வந்துள்ளார்களே” என்று உற்சாகம் ஊட்ட பேசினார். 

இந்நிலையில்  எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, மற்றும் ராஜ் சத்தியன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு முன்பாகவே பல பெண்கள் வெயில் தாங்க முடியாமல் வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்து விட்டனர். இதனால் பல இருக்கைகள் காலியாக காட்சியளித்தன.


ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தன் உற்சாக பேச்சை கைவிடாமல் தொடர்ந்து உரையை பேசினார். முன்னாதக அவர் பேசும் போது பல்வேறு கட்சியில் பயணித்த டாக்டர் சரவணனை மேடையில் பக்கத்தில் வைத்துக் கொண்டே அமைச்சர் செந்தில் பாலாஜி 5 கட்சியில் பயணித்தவர் என்று பேசினார். சமீபத்தில் பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement