✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

RS Bharathi: கள்ளச்சாராய விவகாரம்: ”இபிஎஸ் உத்தம புத்திரர் போல பேசியிருக்கிறார் “: ஆர். எஸ்.பாரதி கடும் கண்டனம்

செல்வகுமார்   |  26 Jun 2024 06:09 PM (IST)

kallakurichi Issue: விஷ சாராய வழக்கில் அதிமுக சிபிஐ விசாரணை கோரிய நிலையில், விரைவாக விசாரிக்கவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில்,  விரைவாக விசாரிக்கவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு: 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 63 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

CBCID விசாரணை

இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இந்த வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு நபர் ஆணையம் அமைப்பு:

இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது

அதிமுக கோரிக்கை : சிபிஐ விசாரணை:

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநரைச் சந்தித்தார். அவருடன் 60-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் உடன் சென்றனர். கருப்புச் சட்டை அணிந்துசென்ற அவர்கள், நியாயமான விசாரணை நடைபெறுவதை அரசு உறுதிசெய்ய, ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஒரு நபர் ஆணையத்தால் நியாயம் கிடைக்காது. மெத்தனால் குடித்தால் சரி செய்யும் மருந்து மருத்துவமனையில் இல்லை. ஆனால் இதை பற்றி நான் பேசிய பிறகுதான் மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளச்சாராய மரணம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றால் சிபிஐதான் விசாரிக்க வேண்டும். மாநில அரசு காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என இபிஎஸ் தெரிவித்தார். 

திமுக பதில்:

விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில்,  விரைவாக விசாரிக்கவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் பிடிபட்ட ரூ. 570 கோடி வழக்கை , சிபிஐ இன்னமும் விசாரித்து வருகிறது. இபிஎஸ்-க்கு எதிரான டெண்டர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரவில்லை. வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு நீதிமன்றம்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. 

நாங்கள் அன்றைக்கும் இன்றைக்கும் சிபிஐ விசாரணை கோரவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். 

Published at: 26 Jun 2024 06:06 PM (IST)
Tags: @admk DMK EPS RS Bharathi
  • முகப்பு
  • செய்திகள்
  • அரசியல்
  • RS Bharathi: கள்ளச்சாராய விவகாரம்: ”இபிஎஸ் உத்தம புத்திரர் போல பேசியிருக்கிறார் “: ஆர். எஸ்.பாரதி கடும் கண்டனம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.