இந்து சன்னாசிகளை பற்றி பேசினால் உங்கள் பின்னணி நோண்டப்படும் என நிதி அமைச்சர்  பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜனின் கருத்து குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,




‛‛அறநிலையத்துறை அமைச்சர் கூட்டத்தில் போட்ட தீர்மானத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ரிஜிஸ்டர் இல்லாததால், தங்க நகைகள் அனைத்தையும் மறைத்து டிஜிட்டலைஸ்டு பண்ணி கொள்ளையடிக்க முயற்சி நடக்குமோ? என்ற அச்சம் உள்ளது.  எனவே தீர்மானத்தை செயல்படுத்தும் முறை சரியாக இருக்க வேண்டும். இந்து கோயிலை பகிரங்கமாக கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. 


தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்து அறநிலையத்துறை கோயில்களுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலம், 22 ஆயிரம் வணிக வளாகங்கள், 33 ஆயிரம் மனைக்கட்டுகள் சொத்தாக உள்ளன. சென்னை மலர் மருத்துவமனைக்கு எதிரே அருணாசலபுரத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்கள். இதை கேட்டால், ஜக்கிவாசுதேவை பி.டி.ஆர்.தியாகராஜன் மிரட்டுகிறார். யார் இந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்? அவர்  குடும்பம் என்ன, மிரட்ட நீங்கள் யார் ? காருண்யா கல்லூரி எத்தனை வனப்பகுதியை மறித்துள்ளனர். அதை பற்றி பேச முதுகெலும்பு உள்ள அமைச்சர்கள் உண்டா? நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை ஜெயிலர் ஜெயப்பிரகாஷை கொன்ற ஒருவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.




இந்துக்களுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் பேசலாமா? மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்பேன் என்று பி.டி.ஆர்.தியாகராஜன் சொல்வாரா? நான் என் வார்த்தையை வாபஸ் வாங்கி கொள்கிறேன். இந்து சாது, சன்னாசிக்களை பற்றி யார் இழிவாக பேசினாலும், உங்கள் பின்னணி நோண்டப்படும். உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். 
பி.டி.ஆர்.தியாகராஜன் போன்ற ஒரு ஆழ்ந்த அறிவு, ஞானம் இல்லாத நபர் எங்கள் மத பிரச்சனையில் தலையிடாதீர்கள். பொட்டு வைத்து, கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் இந்துவா? இல்லை. மத விசுவாசம் வேண்டும். நம்பிக்கை வேண்டும். கமிட்மெண்ட் வேண்டும், என்றார்.


முன்னதா ஈஷா யோகா மையம் தொடர்பாகவும், அதன் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் அது தொடர்பான கருத்துக்களிலிருந்து நேற்று பின்வங்கினார் . ‛இனி ஜக்கி வாசுதேவ் பற்றி பேசப்போவதில்லை,’ என்கிற வரிகளுடன் வந்த அந்த அறிக்கை மூலம் அதை உணர முடிந்தது. இந்நிலையில் தான் எச்.ராஜா பி.டி.ஆர்., பழனிவேல் ராஜனின் முந்தைய கருத்திற்கு காரசாரமாக செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்கருத்து தெரிவித்துள்ளார்.