பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 நிதி உதவி வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் அதிரடி அறிவிப்பு! கலக்கத்தில் நிதிஷ்குமார்!

Continues below advertisement

பீகார் தேர்தல் 2025:

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது மற்றும்  நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இன்றுடன் இறுதிகட்ட பிரச்சாரம் முடிவடைகிறது.

நிதிஷ்குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஒரு அணியாகவும் மற்றும் பிரசாந்த் கிஷோர் தனித்தும் போட்டியிடுகின்றனர். இப்படி 3 அணிகள் களமிறங்குவதால் பீகார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

Continues below advertisement

பெண்கள் வாக்குகளை குறிவைக்கும் கட்சிகள்:

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. இதல் முதன்மையாக பார்க்கப்படுவது பெண்கள் வாக்குகள்தான் .

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக “மந்திரி மஹிளா ரோஜ்கர் யோஜனா” திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இதன் முன்னோட்டமாக  1 கோடி பெண்களுக்கு சுயதொழில் செய்ய ரூ. 10000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனால் பெண்கள் வாக்குகள் நிதிஷ்குமாருக்கு போகும் என்று சொல்லப்பட்டது. இதனை முறியடிக்கும் விதமாக ஆர்.ஜே.டி தலைவரும் மகாகட்பந்தன் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது முதற்கட்ட தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் நாங்கள் பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 30,000 நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் அவர் கூறுகையில் 'மாய் பஹின் மான் யோஜனா' வாக்குறுதி பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ. 2500 பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

பீகார் தேர்தல் கருத்து கணிப்பு:

தேர்தல் கருத்து கணிப்பில் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் தேஜஸ்வி யாதவ் முதல் இடம்பிடித்தார், அதேபோல ஜன் சூராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் இரண்டாம் இடம்பிடித்தார். ஆனால் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது.இந்த செய்தி பீகார் தேர்தல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது