பாஜக கூட்டணி களேபரத்துக்கிடையே வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

பாஜக உடன் கூட்டணி அமைத்தபின், பல்வேறு களேபரங்களுக்கிடையே, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்து, அரசியல் களம் களேபரமாகியுள்ள நிலையில், வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

பாஜக-அதிமுக கூட்டணி களேபரம்

நீண்ட இழுபறிக்குப் பிறகு, அதிமுக-பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டது. அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்காக, பாஜக அதன் தமிழ்நாடு தலைவரையே மாற்றியுள்ளது. அதிமுக உடன் நெருக்கமாக இருக்கும் நயினார் நாகேந்திரன் தலைவராக அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

அதிமுக பக்கமோ, பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே நிராகரித்த கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனம் ஒருபுறம், பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் எஸ்டிபிஐ கட்சி கூட்டணியிலிருந்து விலகியது என தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி கூறிவந்த நிலையில், தற்போது, நீட் தேர்வு சிக்கலை போக்க அதிமுகவிற்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது, நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்று அதிமுக சொல்லுமா என்ற கேள்வி ஆளும் தரப்பிலிருந்து எழுந்துள்ளது. இப்படி, பாஜக உடன் கூட்டணி அமைத்ததால், அதிமுக பெரும் தலைவலியை சந்தித்து வரும் சூழலில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு

இப்படிப்பட்ட சூழலில், வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola