மயிலாடுதுறையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; எங்கே? எப்போது...?

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் நாளை நடைபெற உள்ளது. 

Continues below advertisement

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை நடைபெற்ற உள்ள மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மயிலாடுதுறை இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் சிவ.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அரசின் நடவடிக்கை 

தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. மக்கள் எளிதில் அரசு திட்டங்களை அடைய வேண்டும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மட்டும் பணிகளை அதிகாரிகள் எவ்வித இடையரும் இன்றி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மின்சார வாரியத் துறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டுகிறது. மேலும் அந்தக் கூட்டத்தின் மூலம் மின் துறையில் ஏற்படும் இடையூறுகளை களைய வழிவகை செய்து தருகிறது.

“கவுன்சிலராக கூட ஜெயிக்கல; காசு கொடுத்து அண்ணாமலை செய்யும் காரியம்” - பகீர் கிளப்பும் எஸ்.வி.சேகர்!


நாளை கூட்டம் 

இந்நிலையில் மயிலாடுதுறை  அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில்  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நாளை 13.11.2024 புதன்கிழமை அன்று மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடைபெற உள்ளது.

Sanjay Bangar Son : ஆர்யன் முதல் அனயா வரை: பெண்ணாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மகன்! வைரலாகும் வீடியோ!


மனுவாக குறைகள் 

இக்கூட்டத்தில் பொதுமக்களாகிய மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து தங்கள் குறைகளை சரி செய்துகொள்ளுமாறு  மயிலாடுதுறை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் சிவ.செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். இந்த கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன் கிழமைகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Electric Car Sales: எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை படுஜோர்.! இப்போ, எந்த நிறுவனம் டாப் தெரியுமா?

பெயர் அளவிலான கூட்டம்

மேலும் இது குறித்து மின் நுகர்வோர்கள் கூறுகையில், இந்த மின் நுகர்வோர் குறைதீர் கூட்டமானது மயிலாடுதுறையில் வெறும் பெயரளவில் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், இதில் அளிக்கப்படும் மனுக்கள் மீது பெருமளவில் தீர்வு காணப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும், அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மின் கோட்டத்தில் மின் வாரியம் சார்ந்த பல புகார்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும், ஆகையால் பெயரளவில் இந்த கூட்டத்தை நடத்தாமலும், தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள மின் நுகர்வோர் பிரச்சினைகளைகளுக்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்‌.

Sathyaraj Wife : 4 ஆண்டுகளாக கோமாவில் கிடக்கும் சத்யராஜின் மனைவி...அப்பா பட்ட கஷ்டம் பற்றி மகள் திவ்யா

Continues below advertisement
Sponsored Links by Taboola