Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (08.07.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
சீர்காழி மின் கோட்ட செய்தி குறிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஆச்சாள்புரம் துணை மின் நிலையங்களில் நாளைய 08.07.2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என சீர்காழி மின்வாரிய கோட்ட உதவி செயற் பொறியாளர்கள் மூர்த்தி வெளியியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்பட்டு இடங்கள்
ஆச்சாள்புரம், மாங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், நல்லூர், நாதல்படுகை, தைக்கால், மகேந்திரப்பளாளி, அளக்குடி, புளியந்துறை, பழையார், புதுப்பட்டிணம், மாதானம், பழையபாளையம்,சீயாளம், தாண்டவன்குளம், மடவமேடு, பச்சை பெருமாநல்லூர்,சரஸ்வதிவிளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. கடந்த 03.07.2025 அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்ட மின் நிறுத்தம் நாளைய தினம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.