Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (04.10.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மேலமாத்தூர் துணை மின்நிலையம்
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்கோட்டத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளைய தினம் 04.10.2025 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செம்பனார்கோயில் உதவிசெயற்பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் - மேமாத்தூர்
வாழ்க்கை
மேலபரசலூர்
பரசலூர்
ஆறுபதி
விளநகர்
மேலகட்டளை
ஒட்டங்காடு
கடலி
நெடுவாசல்
பெருங்குடி
கூடலூர்
ராதாநல்லூர்
மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்.
ஆச்சாள்புரம் துணை மின்நிலையம்
04.10.2025 சனிக்கிழமை அன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்கோட்டத்திற்கு உட்பட்ட ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சீர்காழி உதவிசெயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் - ஆச்சாள்புரம்
ஆச்சாள்புரம்
மாங்கனாம்பட்டு
தைக்கால்
கொள்ளிடம்
ஆனைக்காரன்சத்திரம்
நல்லூர்
நாதகல்படுகை
மகேந்திரப்பள்ளி
சரஸ்வதிவிளாகம்
அளக்குடி
புளியந்துறை
பழையார்
புதுப்பட்டினம்
மாதானம்
பழையபாளையம்
பச்சைபெருமாநல்லூர்
சீயாளம்
தாண்டவன்குளம்
மடவாமேடு
மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.
திருவெண்காடு துணை மின்நிலையம்
இதுபோன்று நாளையதினம் 04.10.2025 சனிக்கிழமை அன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்கோட்டத்திற்கு உட்பட்ட திருவெண்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சீர்காழி உதவிசெயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் - திருவெண்காடு
திருவெண்காடு
மேலையூர்
மணிக்கிராமம்
பூம்புகார்
பெருந்தோட்டம்
நாங்கூர்
திருநகரி
திருவாலி
மேலசாலை
மங்கைமடம்
அண்ணன்பெருமாள்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.