மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 05, 2025, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

ஆச்சாள்புரம் துணை மின்நிலையம்

அந்த வகையில் சீர்காழி மின்கோட்டத்திற்கு உட்பட்ட ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் இன்றைய தினம் 05.08.2025 செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சீர்காழி வடக்கு உதவிசெயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

  • ஆச்சாள்புரம்
  • மாங்கனாம்பட்டு 
  • தைக்கால் 
  • கொள்ளிடம்
  • ஆணைகாரன் சத்திரம் 
  • நல்லூர் 
  • நாதல்படுகை 
  • மகேந்திரப்பள்ளி
  • சரஸ்வதிவிளாகம்
  • அளக்குடி 
  • புளியந்துறை
  • சரஸ்வதிவிளாகம் 
  • மாதானம்
  • பழையபாளையம்
  • பச்சைபெருமாநல்லூர் 
  • சீயாளம். மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

முக்கிய அறிவிப்பு

மின்தடை குறித்த இந்த அறிவிப்பு, மின்கட்டமைப்பு மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து கடைசி நேரத்தில் மாறுதலுக்குட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னதாகவே திட்டமிட்டு, அசௌகரியங்களைத் தவிர்க்குமாறு மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.