மயிலாடுதுறை அடுத்த கருவியில் விபத்துக்குள்ளான காரின் நான்கு சக்கரம் மற்றும் மியூசிக் பிளேயர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தரங்கம்பாடி அருகே நடைபெற்ற கார் விபத்து


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கருவியில் கடந்த வாரம் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி  ஒரு குடும்பத்தினர் மாருதி ஸ்விஃப்ட் காரில் சென்றுள்ளனர். அப்போது கருவி அருகே மாருதி ஸ்விப்ட் கார் வளைவில் திரும்பியபோது, கார் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பனைமரத்தின் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரின் எஞ்சின் பகுதியில் மட்டுமே சிறிய அளவில் சேதமடைந்தால் காரில் வந்தவர்கள் சிறு காயத்துடன் தப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து காரை விபத்து நடைபெற்ற இடத்திலேயை பூட்டிவிட்டு மாற்று வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.


Driving License Rules: லைசென்ஸ் வாங்க இனி ஆர்டிஓ ஆஃபீஸ் போக வேண்டியது இல்லை - ஜுன் 1 முதல் புதிய விதி அமல்




காரில் கற்களை முட்டு கொடுத்து சக்கரங்கள் திருட்டு


இந்நிலையில் விபத்துக்குள்ளாகி நின்ற காரை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் காரின்  கண்ணாடியை உடைத்து காரில் இருந்த மீயூசிக் சிஸ்டத்தை திருடியதுடன், காரின் நான்கு சக்கரங்களிலும் கற்களை முட்டு கொடுத்து விட்டு,  சக்கரங்களையும் திருடிச்சென்றுள்ளனர். இந்த சூழலில் காரை மீட்க வந்த உரிமையாளர் காரின் சக்கரங்கள் இல்லாமல் தரையோடு தரையாக கிடந்த காரை கண்டு மீட்க முடியாமல் திரும்பியுள்ளனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக கார் விபத்துக்குள்ளான இடத்தில் சாயையோரம் ஆபத்தான வளைவில் நின்று வருகிறது. இதன்காரணமாக  இருபுறமும் வரும் வாகனங்கள் அச்சத்துடன் அவ்விடத்தை கடந்து செல்கிறது. காரை அப்புறப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து செய்பனார் கோவில் காவல் நிலையத்தில் கேட்ட போது, விபத்து குறித்து எவ்வித புகாரும் தங்களுக்கு வரவில்லை என தெரிவித்தனர்.


Watch Video: கொச்சிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம்.. என்ஜினில் தீ பிடித்ததால் அவசரமாக தரையிறக்கம்..!




அலட்சியம் காட்டும் காவல்துறை


24 மணி நேரமும் போக்குவரத்து கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் திருட்டு போன நிலையில், ஒரு வாரத்திற்கு மேலாக கார் அப்புறப்படுத்தாமல் இருப்பது மேலும் விபத்தை ஏற்படுத்தும் என்பதால் காரை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறையினரும் வளைவில் கிடக்கும் காரை புகாரை எதிர்பார்க்காமல் மேலும் அதனால் ஏற்படும் விபத்தை தடுக்கும் பொருட்டு அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்கள் எழுந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்க முன்பு சீர்காழியில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் நான்கு சக்கரங்களையும் திருடர்கள் களவாடி சென்றதும், இதுநாள் வரை அவர்கள் பிடிபடாததும் குறிப்பிடத்தக்கது.


Actor Chandrakanth: நடிகை பவித்ரா விபத்தில் இறந்த சோகம் முடிவதற்குள் அடுத்த சோகம்.. காதலர் தற்கொலை!